/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முன்பகையால் லாரிக்கு தீ வைத்த இருவர் கைது
/
முன்பகையால் லாரிக்கு தீ வைத்த இருவர் கைது
ADDED : மார் 22, 2024 04:39 AM
முதுகுளத்துார்: -முதுகுளத்துார் அருகே மேலகொண்டுலாவியைச் சேர்ந்த சக்தியேந்திரன் 36. லாரிகள் வைத்து தொழில் செய்து வருகிறார்.
மணல் அடிப்பதில் ஏற்பட்ட முன்பகையில் சித்திரங்குடி சேர்ந்த மாப்பிள்ளைசாமி உட்பட சிலர் சக்தியேந்திரனை தகாத வார்த்தையால் பேசி லாரியை எரித்துவிடுவோம் என மிரட்டி உள்ளனர். இந்நிலையில், முதுகுளத்துார் -- கமுதி சாலை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள பெட்ரோல் பங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி தீவைத்து எரிந்துள்ளது.
முதுகுளத்து இன்ஸ்பெக்டர் துரைபாண்டியன் சித்திரக்குடிச்சேர்ந்த மாப்பிள்ளைசாமி, துாரி சத்தியமூர்த்தி, மேலக்கொண்டுள்ளவி லிங்கநாதன் 3 பேர் மீது வழக்குபதிவு செய்தும் சத்தியமூர்த்தி 54, லிங்கநாதன் 36 ஆகியோரை கைது செய்தனர்.

