ADDED : ஜூன் 27, 2024 05:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி : கமுதி--சாயல்குடி ரோடு அரண்மனை மேடு அருகே கமுதி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த கமுதி கண்ணார்பட்டியைச் சேர்ந்த பாலமுருகன் 28, லட்சுமண தருண்குமார் 20, வந்த டூவீலரை சோதனை செய்த போது கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.
போலீசார் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணையில் கண்ணார்பட்டி மயானம் அருகே சீமைக்கருவேலம் மரங்களுக்குள் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த 600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.