sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மின்கம்பியை மாற்ற லஞ்சம் வாரிய ஊழியர் இருவர் கைது

/

மின்கம்பியை மாற்ற லஞ்சம் வாரிய ஊழியர் இருவர் கைது

மின்கம்பியை மாற்ற லஞ்சம் வாரிய ஊழியர் இருவர் கைது

மின்கம்பியை மாற்ற லஞ்சம் வாரிய ஊழியர் இருவர் கைது


ADDED : ஏப் 27, 2024 01:30 AM

Google News

ADDED : ஏப் 27, 2024 01:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவிபட்டினம்:ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினத்தைச் சேர்ந்தவர் முகமது பிலால். இவரது வீட்டிற்கு மேல் செல்லும் ஆபத்தான உயரழுத்த மின்கம்பியை மாற்றியமைக்க மின்வாரிய அலுவலகத்தில் மனு அளித்தார். அதற்காக மின்வாரியத்திற்கு செலுத்த வேண்டிய 43,000 ரூபாயை ஆன்லைனில் செலுத்தினார்.

இதற்காக, தேவிபட்டினம் மின்வாரிய வணிக ஆய்வாளர் ரமேஷ் பாபு, 47, என்பவர், அதிகாரிகள் பலருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளதால், 6,000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என முகமது பிலாலிடம் கேட்டார். முகமது பிலால் புகாரின்படி ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அவரிடம் கொடுத்தனர்.

அதன்படி, நேற்று முகமது பிலால் கொடுத்த பணத்தை வாங்கிய ரமேஷ்பாபுவை போலீசார் கைது செய்தனர். உடன், பணம் பெற்ற ஒயர்மேன் கந்தசாமி, 53, என்பவரையும் கைது செய்தனர்.

உதவிப் பொறியாளர் செல்வி, 38, தலைமறைவாகியதால் அவரை போலீசார் தேடுகின்றனர்.

 ஸ்ரீவில்லிபுத்துார் அருகே கோட்டைப்பட்டியைச் சேர்ந்தவர் வாசுதேவன், 48; ஆட்டோ ஓட்டுனர். இவர் நல்லகுற்றாலபுரம் தெருவில் புதிதாக வீடு கட்டுவதற்கு கட்டட வரைபட அனுமதிக்கு விண்ணப்பித்திருந்தார். அதற்கு ஒப்புதல் வழங்க, நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் ஜோதிமணி, 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் தர விரும்பாத அவர், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

நேற்று காலை 11:00 மணிக்கு, நகராட்சி அலுவலகத்தில், ஜோதிமணியிடம் வாசுதேவன் ரசாயனம் தடவிய லஞ்ச பணத்தை கொடுக்கும் போது, வாங்கிய ஜோதிமணியை ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us