sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தனுஷ்கோடியில் படகில் ஊடுருவிய இலங்கை வாலிபர்கள் இருவர் கைது கடத்தல்காரர்களா என விசாரணை

/

தனுஷ்கோடியில் படகில் ஊடுருவிய இலங்கை வாலிபர்கள் இருவர் கைது கடத்தல்காரர்களா என விசாரணை

தனுஷ்கோடியில் படகில் ஊடுருவிய இலங்கை வாலிபர்கள் இருவர் கைது கடத்தல்காரர்களா என விசாரணை

தனுஷ்கோடியில் படகில் ஊடுருவிய இலங்கை வாலிபர்கள் இருவர் கைது கடத்தல்காரர்களா என விசாரணை


ADDED : ஜூன் 22, 2024 02:03 AM

Google News

ADDED : ஜூன் 22, 2024 02:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடிக்கு மத்திய ராணுவ இணை அமைச்சர் வந்த நேரத்தில் இலங்கையை சேர்ந்த இரு வாலிபர்கள் படகில் ஊடுருவினர். இவர்களை மரைன் போலீசார் கைது செய்து கடத்தல்காரர்களா என விசாரித்தனர்.

தனுஷ்கோடி கம்பிபாடு கடற்கரையில் நேற்று காலை மரைன் எஸ்.ஐ., காளிதாஸ் மற்றும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது இலங்கை படகுடன் ஊடுருவிய இருவரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

அவர்கள் இலங்கை புத்தளம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஜூனியஸ் 23, ஜூட் அந்தோணி 32, என தெரியவந்தது. சிங்கள மொழியில் பேசியதால் போலீசார் தகவல் சேகரிப்பதில் திணறினர்.

இவர்களது படகில் இன்ஜின் பழுதாகி காற்றின் வேகத்தில் திசைமாறி தனுஷ்கோடியில் ஒதுங்கியதாக தெரிவித்தனர். நேற்று காலை 6:30 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு யோகா நிகழ்ச்சிக்காக மத்திய ராணுவ இணையமைச்சர் சஞ்சய் சேத் வந்திருந்த சமயத்தில் இலங்கை வாலிபர்கள் அங்கு வந்துள்ளனர். இவர்களது படகு இன்ஜின் பழுதானாலும் காற்றின் வேகத்தில் நாகை, கோடியக்கரைக்கு சென்றிருக்க கூடும்.

ஆனால் இவர்கள் தனுஷ்கோடி வந்ததால் கடத்தல்காரர்களா அல்லது வேறு காரணம் உள்ளதா என மத்திய, மாநில போலீசார் விசாரித்தனர். இதன்பின் நேற்று மாலை இருவரையும் பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us