sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

டூவீலருக்கு ரூ.10 கட்டணம் வசூல்; ரூ.15க்கு ரசீது: இது எப்படி சாத்தியம்

/

டூவீலருக்கு ரூ.10 கட்டணம் வசூல்; ரூ.15க்கு ரசீது: இது எப்படி சாத்தியம்

டூவீலருக்கு ரூ.10 கட்டணம் வசூல்; ரூ.15க்கு ரசீது: இது எப்படி சாத்தியம்

டூவீலருக்கு ரூ.10 கட்டணம் வசூல்; ரூ.15க்கு ரசீது: இது எப்படி சாத்தியம்


ADDED : ஆக 05, 2024 07:20 AM

Google News

ADDED : ஆக 05, 2024 07:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : சேதுக்கரை சேது பந்தன ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று ஆடி அமாவாசைக்கு சென்ற பக்தர்களிடம் டூவீலர் நிறுத்த கட்டணம் ரூ.10 வசூலித்தனர்.

ஆனால் ரூ.15 எனகுறிப்பிட்டு ரசீது வழங்கினர். எனவே கட்டணம் வசூலிப்பதில் உள்ள குளறுபடியை விசாரித்து முறைகேட்டில் ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருப்புல்லாணி அருகேயுள்ள சேதுக்கரையில் நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கடற்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக வருகை தந்தனர்.

இதில் வாகனங்களில் வருபவர்களுக்கு டூவீலருக்கு ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இதில் கட்டண ரசீதில் 15 ரூபாய் என, அச்சிட்டு வழங்கப்பட்டது.

வாகனங்கள் நிறுத்துவதற்கு எந்த வசதியும் செய்து தரவில்லை. பக்தர்கள் கடற்கரையில் தாங்கள் கழற்றி விடும் பழைய துணிகளை அப்புறப்படுத்தவில்லை.

இதன்காரணமாக அடுத்து கடற்கரையில் புனித நீராட வந்த பக்தர்கள் சிரமப்பட்டனர்.

பக்தர்களுக்கு போதுமான அளவில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்து தரப்படவில்லை.

மாவட்ட நிர்வாகம் இது குறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.------






      Dinamalar
      Follow us