/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழக்கரையில் மார்ச் 1, 2ல் டைப்ரைட்டிங் தேர்வுகள்
/
கீழக்கரையில் மார்ச் 1, 2ல் டைப்ரைட்டிங் தேர்வுகள்
ADDED : பிப் 26, 2025 07:04 AM
கீழக்கரை: அரசு டைப்ரைட்டிங் தேர்வுகள் மார்ச் 1, 2ல் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ராமநாதபுரம் மையம் சார்பில் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லுாரியில் நடக்கிறது.
கீழக்கரை, பரமக்குடி ஆகிய இடங்களில் 3000 பேருக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.
டைப்ரைட்டிங் தேர்வு கள் தமிழ், ஆங்கிலம் பாடப்பிரிவில் இளநிலை மூன்று தொகுதிகளாகவும், முதுநிலை இரண்டு தொகுதிகளாகவும் நடக்கிறது.
மறுநாள் இளநிலை இரண்டு தொகுதிகளாகவும், முதுநிலை இரண்டு தொகுதிகளாகவும் மற்றும் உயர் வேக தேர்வுகள் இரண்டு தொகுதிகளாகவும் நடக்க உள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட வணிகவியல் பள்ளிகள் சங்க நிர்வாகிகள் சரவணபவா, முருகபூபதி, குஞ்சரமூர்த்தி ஆகியோர் தெரிவித்தனர்.

