/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பேரூராட்சியில் 100 நாள் வேலைதிட்டம் செயல்படுத்த வலியுறுத்தல்
/
பேரூராட்சியில் 100 நாள் வேலைதிட்டம் செயல்படுத்த வலியுறுத்தல்
பேரூராட்சியில் 100 நாள் வேலைதிட்டம் செயல்படுத்த வலியுறுத்தல்
பேரூராட்சியில் 100 நாள் வேலைதிட்டம் செயல்படுத்த வலியுறுத்தல்
ADDED : ஆக 01, 2024 11:12 PM
தொண்டி : தொண்டி பேரூராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்தாததால் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தவிக்கின்றனர்.
தமிழகத்தில் 100 நாள் வேலைதிட்டத்தில் நாள் தோறும் பல லட்சம் தொழிலாளர்கள் வேலை பெறுகின்றனர். ஆனால் பேரூராட்சிகளில் இத்திட்டம் செயல்பாட்டில் இல்லை.
கிராமங்களின் கட்டமைப்புடன் கூடிய பேரூராட்சிகளிலும் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
தொண்டி பேரூராட்சி மக்கள் கூறியதாவது:
தொண்டி பேரூராட்சியில் விவசாய நிலங்களும், அதை சார்ந்த விவசாய தொழிலாளர்களும் அதிகம் உள்ளனர். இவர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை. பெருமானேந்தல், எம்.ஆர்.பட்டினம், பி.வி.பட்டினம், காந்தி நகர், சின்னத்தொண்டி, வேலங்குடி, வடவயல், காமராஜ்நகர் உள்ளிட்ட 15 வார்டுகள் உள்ளன.
எனவே அரசு அறிவித்த 100 நாள் வேலை திட்டத்தை தொண்டி பேரூராட்சியில் செயல்படுத்தினால் இப்பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பல ஆயிரம் தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள் என்றனர்.
பேரூராட்சி தலைவர் ஷாஜகான்பானு கூறுகையில், தொண்டி பேரூராட்சி மிகவும் பின்தங்கிய பகுதி. ஆகவே 100 நாள் வேலை திட்டத்தை இங்கு செயல்படுத்த வேண்டும் என்று அமைச்சர், கலெக்டர் மற்றும் பேரூராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளிக்கபட்டுள்ளது என்றார்.