sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

வேந்தோணி கால்வாய் பாலம் சீரமைக்க வலியுறுத்தல்

/

வேந்தோணி கால்வாய் பாலம் சீரமைக்க வலியுறுத்தல்

வேந்தோணி கால்வாய் பாலம் சீரமைக்க வலியுறுத்தல்

வேந்தோணி கால்வாய் பாலம் சீரமைக்க வலியுறுத்தல்


ADDED : மார் 06, 2025 04:02 AM

Google News

ADDED : மார் 06, 2025 04:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி: பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் வேந்தோணி கால்வாய் பாலம் சேதமடைந்துள்ளதால் சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.

பார்த்திபனுார் மதகு அணையிலிருந்து வலது, இடது பிரதான கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் ஒவ்வொரு கிராமங்களிலும் உள்ள கண்மாய்களை இணைத்துள்ளது. தேசிய, மாநில மற்றும் கிராமப்புற சாலைகளை குறுக்கிடும் பகுதிகளில் கால்வாய் மீது பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலங்கள் பராமரிக்கப்படாமல் இருப்பதால் பல இடங்களில் தடுப்பு சுவர் சேதமடைந்து கம்பிகள் தெரிகின்றன.

மேலும் பாலத்தில் பக்கவாட்டு பகுதிகளில் சீமைக்கருவேல மரங்கள், நாணல்கள் மற்றும் தேவையற்ற மரங்கள் வளர்ந்து அதன் உறுதித் தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. இதே போல் பாலத்தின் அடியில் கழிவு நீர் தேங்கி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துவதுடன், சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து வருகிறது.

இதனால் நெடுஞ்சாலைகளில் கனரக வாகனங்கள் செல்லும் போது பாலம் அதிர்வுக்குள்ளாகிறது. கால்வாய்ப்பாலத்தின் உறுதித் தன்மையை ஆய்வு செய்து சீரமைக்க பொதுப்பணி துறையினர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us