
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு நேற்று காலை 10:00 மணிக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி, திரவியப்பொடி உள்ளிட்ட 16 வகை அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது.
வராகி அம்மனுக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு பஞ்சமுக தீபாராதனையில் சிறப்பு தரிசனம் நடந்தது.
கோயில் வளாகத்தில் ஏராளமான பெண்கள் அம்மி கல்லில் பச்சை விரலி மஞ்சள் அரைத்து உருண்டையாக நேர்த்திக்கடன் பூஜைகளை செய்தனர். எலுமிச்சை, தேங்காய் உள்ளிட்டவைகளில் விளக்கேற்றி வழிபட்டனர்.