/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திரவுபதி அம்மன் கோயில் விழாவில் வீமன் வேஷம்
/
திரவுபதி அம்மன் கோயில் விழாவில் வீமன் வேஷம்
ADDED : ஆக 20, 2024 07:12 AM

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் விழா ஆக.9 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல் தினமும் பல்வேறு கிராம மண்டகப்படி நிகழ்வுகள் நடக்கின்றன.
இதன் ஒரு பகுதியாக மகாபாரதம் மற்றும் திரவுபதியின் வரலாற்று நிகழ்வுகளை எடுத்துரைக்கும் வகையில் வீமன் மற்றும் திரவுபதி வேடமிட்டு நகர்வலம் வந்து விழா கொண்டாடப்படுகிறது.
விழா தொடர்ச்சியாக பெத்தார்தேவன் கோட்டை, கீழக்கோட்டை, புல்லமடை, செட்டியமடை, சப்பாணியேந்தல் உள்ளிட்ட கிராமத்தார்களின் வீமன் பேராண்டிகள் மண்டகப்படி நடந்தது.
நேற்று சிலுகவயல் கிராமத்தார் மண்டகப்படியில் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை உடலில் வர்ணம் பூசி, வேப்ப மர இலைகளை கட்டியும், வீமன் வேடமிட்டு முக்கிய வீதிகள் வழியாக நகர்வலம் வந்தனர்.
மாலையில் மூலவர் அம்மனுக்கு கிராமத்தார் சார்பில் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர்.
ஆக.30ல் முக்கிய விழாவான பூக்குழி விழா நடக்கிறது. செப். 1 ல் மஞ்சள் நீராட்டு விழாவும், செப்.3 ல் பட்டாபிஷேகம் நடைபெற்று விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகக் குழு மற்றும் ஹிந்து பேரவை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

