ADDED : மே 07, 2024 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி ஐந்து முனை ரோடு பகுதியில் பா.ஜ., சார்பில் நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது. மாநில பொதுச் செயலாளர் பொன் பாலகணபதி தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.பி.எஸ்.நாகேந்திரன் முன்னிலை வகித்தார்.
மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜ், மாவட்ட துணைத் தலைவர் முத்துசாமி, செயற்குழு உறுப்பினர் முத்துலிங்கம், பட்டியல் அணி செயலாளர் பிரபு மற்றும் நிர்வாகிகள் செல்வேந்திரன், முரளி, அஜ்மல்கான், தவமுருகன், கவிபிரகாஷ், விண்ரமேஷ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.