sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கரிமூட்டம் போடுவதில் தொழிலாளர்கள் ஆர்வம்

/

கரிமூட்டம் போடுவதில் தொழிலாளர்கள் ஆர்வம்

கரிமூட்டம் போடுவதில் தொழிலாளர்கள் ஆர்வம்

கரிமூட்டம் போடுவதில் தொழிலாளர்கள் ஆர்வம்


ADDED : ஜூன் 25, 2024 10:59 PM

Google News

ADDED : ஜூன் 25, 2024 10:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கரிமூட்டம் போட்டு கரி உற்பத்தி செய்வதில் தொழிலாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா மற்றும் சுற்றுப்புற கிராமங்கள் அனைத்தும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டே அமைந்துள்ளன. ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் தற்போது பருத்தி, பயறு வகைகள் உள்ளிட்ட சிறு தானிய சாகுபடிகள் மட்டுமே கோடை சாகுபடியாக சில விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மற்ற விவசாயிகள் விவசாயப் பணிகள் துவங்கும் வரை ஆண்டு தோறும் சீமைக்கருவேல மரம் வெட்டும் தொழிலில் ஆர்வம் காட்டுவது வழக்கம். ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் இன்னும் நெல் விதைப்பு பணி துவங்க இரண்டு மாதங்களுக்கு மேல் உள்ள நிலையில் விவசாயிகள் சீமைக்கருவேல மரங்களை வெட்டி நேரடியாக எடையிட்டு விறகுகளாகவும், கரி மூட்டம் போட்டு கரி விற்பனை செய்கின்றனர்.

குறிப்பாக ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் விறகு வெட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பெரிய விறகுகளை கரிமூட்டம் மூலம் கரிகளாக்கி விற்பனை செய்வதில் கூடுதல் லாபம் கிடைப்பதால், தொழிலாளர்கள் கரிமூட்ட தொழிலில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.






      Dinamalar
      Follow us