/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மேலக்கிடாரத்தில் வருடாபிஷேக விழா
/
மேலக்கிடாரத்தில் வருடாபிஷேக விழா
ADDED : ஆக 04, 2024 06:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிக்கல் : சிக்கல் அருகே மேலக்கிடாரம் உய்ய வந்த அம்மன் கோயிலில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நிறைவேற்றப்பட்டது.
நேர்த்திக்கடன் பக்தர்கள் 108 பால்குடம் சுமந்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் உலா வந்தனர்.
பால்குடத்தில் கொண்டுவரப்பட்டு பாலில் சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது.
பின்னர் ஹோம வேள்விகள், அலங்கார தீபாராதனைகள் நடந்தன. பெண்கள் நெய் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் மற்றும் மேலக்கிடாரம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.