/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலங்கை கடற்படையால் 10 மீனவர் கைது
/
இலங்கை கடற்படையால் 10 மீனவர் கைது
ADDED : பிப் 21, 2025 02:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்:நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள், 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், இந்திய, இலங்கை எல்லையில் மீன் பிடித்த போது,அங்கு இரு கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கியை காட்டி எச்சரித்து விரட்டினர்.
பீதியடைந்த மீனவர்கள் வலையை இழுத்து தப்ப முயன்றனர். இதில், மூன்று விசைப்படகுகளை பிடித்த இலங்கை வீரர்கள், அதில் இருந்த மீனவர்கள் ஜோதிராஜன், 55, உட்பட உட்பட, 10 பேரை கைது செய்து, நான்கு பேரை வவுனியா சிறையிலும், ஆறு பேரை யாழ்ப்பாணம் சிறையிலும் அடைத்தனர்.

