sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

10 கிலோ தங்கம் கடலில் வீச்சு தேடி வரும் ஸ்கூபா வீரர்கள்

/

10 கிலோ தங்கம் கடலில் வீச்சு தேடி வரும் ஸ்கூபா வீரர்கள்

10 கிலோ தங்கம் கடலில் வீச்சு தேடி வரும் ஸ்கூபா வீரர்கள்

10 கிலோ தங்கம் கடலில் வீச்சு தேடி வரும் ஸ்கூபா வீரர்கள்


ADDED : பிப் 23, 2024 10:33 PM

Google News

ADDED : பிப் 23, 2024 10:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:இலங்கையில் இருந்து மன்னார் வளைகுடா கடல் வழியாக மண்டபம் வேதாளைக்கு தங்கக்கட்டிகள் சிலர் கடத்தி வருவதாக, திருச்சி மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படையினரிடம் அவர்கள் தெரிவித்தனர்.

நேற்று அதிகாலை, வேதாளை கடற்கரை நோக்கி பைபர் கிளாஸ் படகு ஒன்று மண்டபம் வந்தது. இந்திய கடலோரக் காவல் படை ரோந்து கப்பலில் இருந்த வீரர்கள், அந்த படகை மடக்கினர். படகில் இருந்த ஒருவர் தங்கக் கட்டிகளை கடலில் வீசி விட்டு, கடலில் குதித்து நீந்தி தப்பினார். படகில் இருந்த இரு கடத்தல்காரர்களை இந்திய வீரர்கள் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையின்படி, கடலில் வீசப்பட்டது, 6.25 கோடி ரூபாய் மதிப்புள்ள, 10 கிலோ தங்கக்கட்டி என்பது தெரிந்தது. அதையடுத்து, ஸ்கூபா நீச்சல் பயிற்சி பெற்ற இந்திய வீரர்கள், கடலோர காவல் படையினர், மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் கடலில் குதித்து நேற்று முதல் தேடினர். எனினும், இரவு வரை கிடைக்கவில்லை.






      Dinamalar
      Follow us