sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மயில்களின் சரணாலயமாக விளங்கும் 10 கிராமங்கள்

/

மயில்களின் சரணாலயமாக விளங்கும் 10 கிராமங்கள்

மயில்களின் சரணாலயமாக விளங்கும் 10 கிராமங்கள்

மயில்களின் சரணாலயமாக விளங்கும் 10 கிராமங்கள்


ADDED : ஜன 02, 2025 04:49 AM

Google News

ADDED : ஜன 02, 2025 04:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரெகுநாதபுரம்: திருப்புல்லாணி ஒன்றியத்தில் பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் மயில்கள் அதிகமாக உள்ளதால் இப்பகுதியை மயில்களின் சரணாலயமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மேதலோடை, குத்துக்கல் வலசை, தினைக்குளம், ரெகுநாதபுரம், வண்ணாங்குண்டு, சின்னாண்டி வலசை, நேருபுரம், களிமண்குண்டு, உமையன் வலசை, கொட்டியக்காரன் வலசை, உத்தரவை உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள வயல்களில் தேசிய பறவையான மயில்களின் வாழ்விடமாக உள்ளன.

இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:

இப்பகுதியில் அதிகளவில் தென்னந்தோப்பு, பனை மரங்கள் மற்றும் நெல் வயல்கள் உள்ளன. இயற்கை சார்ந்த அதிக மண் வளமிக்க இப்பகுதியில் இரை தேடுவதற்காக ஏராளமான மயில்கள் காலை, மாலை நேரங்களில் கூட்டமாக வயல்வெளிக்கு வருகின்றன.

கிராம மக்கள் மயில்களை ஆர்வமுடன் பாதுகாக்கின்றனர். மயில்கள் இரை தேடிக்கொண்டு ஓர் இடத்தில் இருந்து முட்டை இட்டு குஞ்சு பொரித்து அவற்றை உடன் அழைத்துச் செல்லும் பாங்கு அழகுற அமைந்துள்ளது. மயில்களின் நடமாட்டத்தால் இப்பகுதி கிராமங்கள் அழகு மிளிர்வதாக தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us