/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நுாறு நாட்களில் 100 சதவீதம் வாசித்தல்
/
நுாறு நாட்களில் 100 சதவீதம் வாசித்தல்
ADDED : ஏப் 18, 2025 05:35 AM
திருவாடானை: திருவாடானை ஒன்றியத்தில் 100 நாட்களில் 100 சதவீதம் வாசித்தல் திட்டம்செயல்படுத்தப்பட்டு மாணவர்களின் திறன் பரிசோதனை நடந்தது.
அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வகையில் 100 நாட்களில் 100 சதவீதம்வாசித்தல் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
இதில் திருவாடானை ஒன்றியத்தில் ஆதியூர் (கிழக்கு), கடம்பனேந்தல், குளத்துார், கோடனுார், சின்னத்தொண்டி, திருவடிமதியூர், தீர்த்தாண்டதானம், தொண்டி (கிழக்கு), புதுவயல், மச்சூர், அடுத்தகுடி, அரசூர், ஏழுர், கருப்பூர், கீழஅரும்பூர், குஞ்சங்குளம், சம்பூரணி, சிறுகம்பையூர், பேராமங்களம், காடாங்குடி, தினையத்துார் ஆகிய பள்ளிகளில் இத் திட்டம் துவக்கப்பட்டது.
நுாறு நாட்களில் தமிழ், ஆங்கிலம் வாசித்தல் பயிற்சி மற்றும் கணிதப்பாடத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், போன்ற அடிப்படை திறன் பரிசோதனை ஏப்.,7ல் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை நடந்தது.
நேற்று 4, 5ம் வகுப்பு மாணவர்களிடம் வட்டாரக் கல்வி அலுவலர்கள் புல்லாணி, ஆரோக்கியசாமி, மேற்பார்வையாளர் கார்த்திக் நடத்தினர்.

