sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மூன்று ஊராட்சிகளில் 100 சதவீதம் வரி வசூல்

/

மூன்று ஊராட்சிகளில் 100 சதவீதம் வரி வசூல்

மூன்று ஊராட்சிகளில் 100 சதவீதம் வரி வசூல்

மூன்று ஊராட்சிகளில் 100 சதவீதம் வரி வசூல்


ADDED : ஜூலை 29, 2025 11:06 PM

Google News

ADDED : ஜூலை 29, 2025 11:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை; திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் மூன்று ஊராட்சிகளில் 100 சதவீதம் வரி வசூல் செய்யப்பட்டது. திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் 47 ஊராட்சிகள் உள்ளன. அனைத்து ஊராட்சிகளிலும் வரிவசூல் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) ஆரோக்கியமேரிசாராள் கூறியதாவது:

வரியினங்கள் வாயிலாக வரும் வருமானம் ஊராட்சியின் வளர்ச்சிக்கு முக்கியமானது. இதனால் ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் வரி, தொழில் வரி உள்ளிட்ட பல்வேறு வரியினங்களை பொதுமக்களிடமிருந்து வசூலிக்க ஊராட்சி செயலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஒலிபெருக்கி மூலமாகவும், வீடு, வீடாக சென்று மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அனைத்து ஊராட்சிகளிலும் வரி வசூல் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதில் 100 சதவீதம் வரி வசூல் செய்த முள்ளிமுனை ஊராட்சி சக்கரை அழகு, முகிழ்த்தகம் ஊராட்சி செந்தில்நாதன், காரங்காடு ஊராட்சி சாந்தி ஆகிய மூன்று ஊராட்சி செயலர்கள் 100 சதவீதம் வசூல் செய்தனர்.

அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. 15 ஊராட்சிகளில் 50 சதவீதத்திற்கு மேல் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது என்றார்.






      Dinamalar
      Follow us