ADDED : டிச 16, 2025 05:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் கார்த்திகை கடைசி சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிேஷகம் நடந்தது.
நேற்று மாலை புனித நீர் நிரப்பிய சங்குகளில் புஷ்ப அலங்காரம் செய்யபட்டு யாகசாலை பூஜை நடந்தது. வலம்புரி சங்கும் பூஜையில் வைக்கபட்டிருந்தது.
1008 சங்குகளிலும் நிரப்பபட்டிருந்த புனித நீரால் ஆதிரெத்தினேஸ்வரருக்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க அபிேஷகம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

