/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாயல்குடி பேரூராட்சி வளாகத்தில் நிறுத்தப்படும் 108 ஆம்புலன்ஸ்
/
சாயல்குடி பேரூராட்சி வளாகத்தில் நிறுத்தப்படும் 108 ஆம்புலன்ஸ்
சாயல்குடி பேரூராட்சி வளாகத்தில் நிறுத்தப்படும் 108 ஆம்புலன்ஸ்
சாயல்குடி பேரூராட்சி வளாகத்தில் நிறுத்தப்படும் 108 ஆம்புலன்ஸ்
ADDED : ஜூலை 15, 2025 03:21 AM
சாயல்குடி: சாயல்குடி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கடலாடி அரசு தாலுகா மருத்துவமனைக்கு உரிய ஆம்புலன்ஸ் சாயல்குடி பேரூராட்சி அலுவலகம் வளாகத்தில் நிறுத்தப்படுகிறது.
இதனருகே உள்ள சேதமடைந்த கட்டடத்தில் ஆம்புலன்ஸ் நிறுத்தப்படுவதால் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தங்குதல் உள்ளிட்ட அடிப்படை வசதிக்காக சிரமத்தை சந்திக்கின்றனர். தன்னார்வலர்கள் கூறியதாவது:
சாயல்குடி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் நிறுத்துவதற்கான வசதி உள்ளது. அதேபோல் கடலாடி அரசு தாலுகா மருத்துவமனையிலும் நிறுத்துவதற்கு வசதி உள்ள நிலையில் அங்கு இருந்து 2 கி.மீ., மற்றும் 10 கி.மீ., தொலைவில் நிறுத்தப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் சர்வீசால் பொதுமக்கள் சிரமத்தை சந்திக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட மருத்துவமனை வளாகத்தில் ஆம்புலன்ஸ் சேவையை நிலை நிறுத்தி வைத்தால் கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்படக்கூடிய விபத்துகளில் விரைவில் முதலுதவி அளிப்பதற்கு வசதியாக இருக்கும். மேலும் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கான தங்குமிடம் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த சம்பந்தப்பட்ட மருத்துவத்துறையினர் முன்வர வேண்டும் என்றனர்.