/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலங்கைக்கு கடத்த முயன்ற 1080 கிலோ பீடி இலை பறிமுதல்
/
இலங்கைக்கு கடத்த முயன்ற 1080 கிலோ பீடி இலை பறிமுதல்
இலங்கைக்கு கடத்த முயன்ற 1080 கிலோ பீடி இலை பறிமுதல்
இலங்கைக்கு கடத்த முயன்ற 1080 கிலோ பீடி இலை பறிமுதல்
ADDED : ஆக 09, 2025 01:58 AM

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 1080 கிலோ பீடி இலையை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம் கடற்கரை பகுதிகளில் இருந்து நேற்று அதிகாலை 3:00 மணிக்கு படகில் இலங்கைக்கு பீடி இலை கடத்துவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து உச்சிப்புளி போலீசார் கடற்கரை பகுதியில் நின்ற சரக்கு வாகனத்தை சோதனை செய்ய முயன்றனர். அதைப்பார்த்த கடத்தல்காரர்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பினர்.
அதனை சோதனை செய்த போது அதில் தலா 30 கிலோ எடையுடன் 36 மூடைகள் பீடி இலைகள் இருந்தன. ரூ.13 லட்சம் மதிப்பிலான 1080 கிலோ பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றை சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேல்விசாரணை நடக்கிறது.