/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து 12 குழந்தைகள் காயம்
/
பரமக்குடி அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து 12 குழந்தைகள் காயம்
பரமக்குடி அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து 12 குழந்தைகள் காயம்
பரமக்குடி அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து 12 குழந்தைகள் காயம்
ADDED : பிப் 10, 2025 11:40 AM

பரமக்குடி; ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பார்த்திபனூரில் இயங்கும் கிரசன்ட் மெட்ரிக் பள்ளி வாகனம் கவிழ்ந்ததில் 12 குழந்தைகள் காயம் அடைந்தனர்.
பார்த்திபநூரில் உள்ள இப் பள்ளியில் சுமார் 150 மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளிக்கு சொந்தமான வேன் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு கமுதி - பார்த்திபனூர் நெடுஞ்சாலையில் தேவனேரி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது பள்ளி வேனுக்கு முன்னால் டூவீலர் குறுக்கே வந்தது. தொடர்ந்து வேன் டிரைவர் பிரேக் பிடித்த போது கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 12 குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்ட நிலையில், 108 ஆம்புலன்ஸ் மூலம் பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நான்கு குழந்தைகளுக்கு தலையில் ரத்த காயம், கை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து பார்த்திபனூர் போலீசார் விசாரிக்கின்றனர்