sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

120 டூவீலர்கள் ஒப்படைப்பு

/

120 டூவீலர்கள் ஒப்படைப்பு

120 டூவீலர்கள் ஒப்படைப்பு

120 டூவீலர்கள் ஒப்படைப்பு


ADDED : ஜூலை 03, 2025 09:53 PM

Google News

ADDED : ஜூலை 03, 2025 09:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை; போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்கு முடிந்தும் எடுத்துச் செல்லாமல் உள்ள டூவீலர்களை உரிய ஆவணங்களை காண்பித்து எடுத்து செல்லலாம் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து 120 டூவீலர்கள்உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருவாடானை சப்--டிவிஷனில் திருவாடானை, தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம், திருப்பாலைக்குடி, எஸ்.பி.பட்டினம் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. விபத்து, மது அருந்தி டூவீலர் ஓட்டியது மற்றும் பல்வேறு குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்ட டூவீலர்கள் கைப்பற்றப்பட்டு போலீஸ் ஸ்டேஷன்களில் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதில் வழக்குகள் முடிந்து பல ஆண்டுகள் ஆகியும் வாகன உரிமையாளர்கள் வாகனங்களை எடுத்துச் செல்லாமல் உள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் ஆதார் அட்டை, வாகன உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணங்களை காண்பித்து எடுத்து செல்லலாம். கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ள வாகனங்கள் ஒப்படைக்கப்படமாட்டது.

குறிப்பாக டூவீலர் உரிமையாளர்கள் உரிய ஆவணங்களை காட்டி எடுத்துச் செல்லலாம் என திருவாடானை டி.எஸ்.பி., சீனிவாசன் கூறினார்.

இதுகுறித்த செய்தி தினமலர் நாளிதழில் வெளியானது. அதனை தொடர்ந்து 120க்கும் மேற்பட்ட டூவீலர்களை அதன் உரிமையாளர்கள் ஆவணங்களை காட்டி எடுத்து சென்றனர்.






      Dinamalar
      Follow us