ADDED : மார் 21, 2025 11:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்; இலங்கை சிறையில் உள்ள பாம்பன் மீனவர்கள் 14 பேருக்கு தலா, 4.50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மார்ச் 6ல் ராமேஸ்வரம் அருகே பாம்பனில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களின் ஒரு படகை பறிமுதல் செய்து, அதில் இருந்த 14 மீனவர்களை, இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்தனர். 14 பேரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோர்ட் வாய்தா நாளான நேற்று மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, மீனவர்கள் எல்லை தாண்டி வந்து தடை செய்த வலையில் மீன் பிடித்தது உறுதியானதால், 14 பேருக்கும் தலா 4.50 லட்சம் இலங்கை ரூபாய், இந்திய மதிப்பில் 1.30 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, தீர்ப்பு அளித்தார்.
இதையடுத்து, மீனவர்கள் மீண்டும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.