/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் வந்த ரயிலில் 15 கிலோ குட்கா பறிமுதல்
/
ராமேஸ்வரம் வந்த ரயிலில் 15 கிலோ குட்கா பறிமுதல்
ADDED : ஜூலை 30, 2025 12:26 AM

ராமநாதபுரம்; ராமநாதபுரம் வந்த பெரோஸ்பூர் விரைவு ரயிலில் இருந்த 15 கிலோ குட்காவை கைப்பற்றி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
பெரோஸ்பூரில் இருந்து ராமேஸ்வரத்திற்கு செல்லும் வாரந்திர ரயில் திங்கள் கிழமை மாலை 6:30 மணிக்கு ராமநாதபுரம் வந்தடைகிறது. நேற்று இந்த ரயில் 12:00 மணி நேரம் தாமதமாக நேற்று காலை 8:30 மணிக்கு ராமநாதபுரம் வந்தது. ரயில்வே எஸ்.ஐ., இளங்கோவன் தலைமையில் போலீசார் ரயில் பெட்டிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது முன்பதிவு பெட்டியான பி 2 பெட்டியில் மூடை ஒன்று கேட்பாரற்று கிடந்தது. அதனை சோதனையிட்டதில் 15 கிலோ குட்கா இருந்தது.
இதனை கைப்பற்றி குட்கா மூடையை கடத்தி வந்தவர்கள் குறித்து ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட குட்காவின் மதிப்பு ரூ.2 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.