/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலங்கைக்கு கடத்த முயன்ற 1.5 டன் பீடி இலை பறிமுதல்
/
இலங்கைக்கு கடத்த முயன்ற 1.5 டன் பீடி இலை பறிமுதல்
ADDED : நவ 09, 2025 02:32 AM

ராமநாதபுரம்: இலங்கைக்கு கடத்துவதற்காக புதுமடம் கடற்கரைக்கு கொண்டு வரப்பட்ட 1530 கிலோ பீடி இலை பண்டல்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம்மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள ஊமையன் குடா கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தால், புது மடம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அங்கு சோதனை செய்தனர்.
பனை மரங்கள் சூழ்ந்த காட்டுப்பகுதியில் சிலர் டிராக்டரில் பீடி இலை பண்டல்களை எடுத்து வந்து கடற்கரை யில் இறக்கி படகில் ஏற்ற தயார் நிலையில் வைத்து உள்ளனர்.
போலீசார் வருவது தெரிந்ததால் தப்பிச் சென்றனர். அங்கு 51 பண்டல்களில் தலா 30 கிலோ பீடி இலைகள் இருப்பது தெரிய வந்தது.
ரூ.25 லட்சம் மதிப் பிலான 1530 கிலோ பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். டிராக்டருடன் பீடி இலைகளை ராமநாதபுரம் சுங்கத்துறையிடம் ஒப் படைத்தனர்.

