sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

17 மீனவர்கள் விடுதலை கோரி போராட்டம் நடத்த முடிவு

/

17 மீனவர்கள் விடுதலை கோரி போராட்டம் நடத்த முடிவு

17 மீனவர்கள் விடுதலை கோரி போராட்டம் நடத்த முடிவு

17 மீனவர்கள் விடுதலை கோரி போராட்டம் நடத்த முடிவு


ADDED : செப் 30, 2024 11:41 PM

Google News

ADDED : செப் 30, 2024 11:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்த 17 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களை உடனடியாக விடுதலை செய்யாவிடில் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் மீனவர்கள் செப்.,28 ல் இந்திய எல்லையில் கச்சத்தீவு அருகேமீன்பிடித்த போது விரட்டி வந்த இலங்கை கடற்படையினர் இரு படகுகள், அதிலிருந்த 17 மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவர்களை விடுதலை செய்யக்கோரி நேற்று ராமேஸ்வரம் வி.கே. ஞானசீலன் விசைப்படகு மீனவர் நலச்சங்கம், பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்தனர்.

விசைப்படகு மீனவர் நலச்சங்கத் தலைவர் பி.காரல் மார்க்ஸ் கூறியதாவது:


மீனவர்கள் கடலுக்குச் சென்றால் தான் குடும்பத்தை காப்பாற்ற முடியும். இலங்கை அரசு ராமேஸ்வரம் மீனவர்களின் வயிற்றில் அடிக்கிறது. உடனடியாக படகுகள், 17 மீனவர்களை மீட்டுத்தருகிறோம் என கலெக்டர் கூறியுள்ளார்.

மத்திய, மாநில அரசுகள் மீனவர்கள், படகுகளை மீட்டுத்தரவில்லை என்றால் அடுத்தக்கட்டமாக மீனவர் குடும்பங்கள் இணைந்து சாகும் வரை தொடர் போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்.






      Dinamalar
      Follow us