/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் கைது
/
ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் கைது
ADDED : செப் 29, 2024 11:43 PM

ராமேஸ்வரம் : ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம், 309 விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் வழக்கம்போல் மீன்வளம் நிறைந்த இந்திய - இலங்கை எல்லையில் மீன்பிடித்தனர்.
அங்கு மூன்று கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கியை காட்டி எச்சரித்து மீனவர்களை விரட்டினர். பீதியடைந்த மீனவர்கள் கடலில் வீசிய வலையை இழுத்து வைத்துக் கொண்டு, படகுடன் நாலாபுறமும் சென்றனர்.
அப்போது, உயிர்த்தராஜ், செல்வம் ஆகியோரது படகில் இருந்த மீனவர்கள் வலையை இழுக்க தாமதமானதால் ஆத்திரமடைந்த இலங்கை வீரர்கள் இரு படகுகளையும் பிடித்தனர்.
படகில் இருந்த மீனவர்கள் 17 பேரையும் கைது செய்து, மன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். மீனவர்கள் மீது வழக்கு பதிந்து வவுனியா சிறையில் அடைத்தனர்.
மீனவர்களை விடுவிக்கக்கோரி நேற்று ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் உறவினர்கள் மறியல் செய்தனர்.