/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 179 மனுக்கள்: நலத்திட்ட உதவி
/
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 179 மனுக்கள்: நலத்திட்ட உதவி
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 179 மனுக்கள்: நலத்திட்ட உதவி
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 179 மனுக்கள்: நலத்திட்ட உதவி
ADDED : நவ 05, 2024 05:01 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில்172 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில்மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங்காலோன் தலைமை வகித்தார். பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள்குறித்த 179 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மனுக்களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2பேருக்கு இலவச மூன்று சக்கர சைக்கிள்களையும், ஒருவருக்கு பார்வை குறைவுடையோர்க்கான கல்வி பயிலும் வாசிப்பு உதவி உபகரணங்களையும், 2பேருக்கு மூளை முடக்குவாத சிறப்பு சக்கர நாற்காலிகள் என ரூ.53 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்கோவிந்தராஜலு, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் தனலெட்சுமி மாவட்ட வழங்கல் அலுவலர் இளங்கோ, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலசுந்தரம், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.