sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இலங்கைக்கு கடத்தப்பட்ட 1839 கி., இஞ்சி பறிமுதல்

/

இலங்கைக்கு கடத்தப்பட்ட 1839 கி., இஞ்சி பறிமுதல்

இலங்கைக்கு கடத்தப்பட்ட 1839 கி., இஞ்சி பறிமுதல்

இலங்கைக்கு கடத்தப்பட்ட 1839 கி., இஞ்சி பறிமுதல்


ADDED : பிப் 02, 2025 01:58 AM

Google News

ADDED : பிப் 02, 2025 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:தமிழகத்தில் இருந்து இஞ்சி மூடைகள் கடத்தப்படுவதாக இலங்கை கற்பிட்டி போலீஸ் சிறப்பு புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. நேற்று மாலை கற்பிட்டி போலீசாருடன் இலங்கை சிறப்பு அதிரடி படையினர் இணைந்து இஞ்சி மூடைகளை கடத்திச் செல்லப்படுகிறதா என கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது டூவீலரில் சென்ற இருவரை விசாரித்தனர். தமிழகத்தில் இருந்து கடல் வழியாக இஞ்சி மூடைகள் கடத்தி சென்று பின் கரையில் இருந்து லாரி மூலம் கடத்தி செல்வதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கற்பிட்டி சம்மட்டி வாடி கடற்கரை பகுதியில் இருந்து கொழும்பிற்கு இஞ்சி மூடைகளை கடத்திக் கொண்டு கண்டகுடா பெட்ரோல் பங்க் முன்பு சென்ற லாரியை மறித்தனர். அதில் 45 மூடைகளில் 1839 கிலோ இஞ்சி இருந்தது தெரிய வந்தது.

கைப்பற்றப்பட்ட இஞ்சி மூடைகள் இலங்கை மதிப்பின்படி ரூ.90 லட்சம் என போலீசார் தெரிவித்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி, டூவீலரை கட்டுநாயக்கசுங்கத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கற்பிட்டி போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us