ADDED : மார் 20, 2024 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி : கமுதி அருகே தலைவநாயக்கன்பட்டி கிராமத்தில் விவசாயம், கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. இந்த ஊரில் அடையாளம் தெரியாத நபர்கள் ஆடுகளை திருடுவதாக தகவல் கிடைத்தது.
இதனையடுத்து கிராம மக்கள் சுற்றி வளைத்து ஒருவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
பின்பு கமுதி போலீஸ் விசாரணையில் அம்மன்பட்டி  பிரித்விராஜ் 27,  மூலக்கரைபட்டி சரவணன் 23, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

