sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மழை நீரால் மேம்பாலம் கட்டும் பணிகளில் பாதிப்பை தடுக்க 20 ஆயிரம் மணல் மூடை

/

மழை நீரால் மேம்பாலம் கட்டும் பணிகளில் பாதிப்பை தடுக்க 20 ஆயிரம் மணல் மூடை

மழை நீரால் மேம்பாலம் கட்டும் பணிகளில் பாதிப்பை தடுக்க 20 ஆயிரம் மணல் மூடை

மழை நீரால் மேம்பாலம் கட்டும் பணிகளில் பாதிப்பை தடுக்க 20 ஆயிரம் மணல் மூடை


ADDED : அக் 21, 2024 04:51 AM

Google News

ADDED : அக் 21, 2024 04:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே ரூ.48 கோடியில் கட்டப்பட்டு வரும் காவனுார் மேம்பாலப் பணிகளில் பாதிப்பை தடுக்கும் வகையில் 20 ஆயிரம் மணல் மூடைகள் கரைப்பகுதியில் அடுக்கும் பணி நடக்கிறது.

மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை அக்., நவ., மாதங்களில் அதிகளவில் பெய்கிறது. இக்காலத்தில் மழை நீருடன், வைகை ஆற்று நீரும் அதிகம் வருவதால் ராமநாதபுரம் - நயினார்கோவில் தொருவளூர், காவனுார் ஆற்று தரைப்பாலங்கள் மூழ்கி மேல்மட்டம் வரை தண்ணீர் செல்லும் போது நயினார்கோவில் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

இதையடுத்து மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.48 கோடியில் காவனுார், தொருவளூர் பகுதியில் இரு மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. மழைக்காலத்தை முன்னிட்டு சாலையின் இருபுறமும் 20 ஆயிரம் மணல் மூடைகள் பாலப்பணியை பாதிக்காத வகையில் கரைகளில் அடுக்கும் பணி ராமநாதபுரம் கோட்டப்பொறியாளர் முருகன் மேற்பார்வையில் நடக்கிறது.

இதன் மூலம் வைகை நீர் விவசாயத்திற்கு தங்கு தடையின்றி செல்வதற்கும், மேம்பாலத்தில் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்வதற்கும் வழி ஏற்பட்டுள்ளது என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us