/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கைது; நாளை பாம்பன் பாலத்தில் மறியல்
/
ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கைது; நாளை பாம்பன் பாலத்தில் மறியல்
ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கைது; நாளை பாம்பன் பாலத்தில் மறியல்
ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கைது; நாளை பாம்பன் பாலத்தில் மறியல்
ADDED : நவ 10, 2024 11:05 PM

ராமேஸ்வரம் ; நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதனை கண்டித்து நவ., 12ல் பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என மீனவர்கள் தெரிவித்தனர்.
நவ., 9ல் ராமேஸ்வரத்தில் இருந்து 393 விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள் வழக்கம்போல் இந்திய, இலங்கை எல்லை அருகே மீன்பிடித்தனர். அங்கு ரோந்து சென்ற இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கியை காட்டி எச்சரித்து மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டினர். பீதியடைந்த மீனவர்கள் கடலில் வீசிய வலைகளை அவசரமாக படகில் இழுத்து வைத்து கொண்டு படகுடன் ஓடினர்.
அப்போது கீதன், சகாயராஜ், பாலகிருஷ்ணன் ஆகியோரது படகுகளில் இருந்த மீனவர்கள் வலையை இழுக்க தாமதமானதால், அப்படகுகளை இலங்கை வீரர்கள் மடக்கி பிடித்தனர். படகுகளில் இருந்த மீனவர்கள் மார்சல் டிட்டோ 41, தயாளன் 45, தாமஸ் ஆரோக்கியராஜ் 45, ஜான்பிரிட்டோ 58, ஜெயராஜ் 37, சண்முகவேல் 54, அருள் 40, கிங்ஸ்லி 45, மற்றும் ஜெரோம் 47, மரிய ரொனால்ட் 44, சரவணன் 43, யாக்கோபு 35, டைட்டஸ் 39, ரெக்ஸ் 39, ஆனந்த் 38, அமலதீபன் 30, மற்றும் சுவிட்டர் 51, கிறிஸ்துராஜா 45, விஜி 43, ஜான் 27, லிங்கம் 50, சர்மிஸ் 32, சுல்டாஷ் 41, ஆகியோரை கைது செய்து யாழ்ப்பாணம் மீன்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர். மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மறியல் போராட்டம்:
கைதான மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க கோரி நவ.,12ல் பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் மறியல் நடக்கும் என ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர்.
பதிவு எண் இல்லாத படகு
இலங்கை கடற்படை சிறைபிடித்த கீதன் என்பவரது படகு ராமேஸ்வரம் மீன்துறை அனுமதி இன்றி மீன்பிடிக்க சென்றது பைபர் கிளாஸ் படகு ஆகும். இப்படகிற்கு மீன்துறை பதிவு எண் இல்லை. இதனால் மீன்பிடிக்க அனுமதி டோக்கனும் வழங்கப்படவில்லை. இதுகுறித்து மத்திய, மாநில உளவு போலீசார் அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர்.