ADDED : ஏப் 04, 2025 06:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: தொண்டி அருகே வீரசங்கலிமடம் ஆற்றுப் பகுதியில் கானாட்டாங்குடி குரூப் வி.ஏ.ஓ. முத்துலட்சுமி சென்று ஆய்வு செய்த போது டிராக்டரில் மணல் திருடுவது தெரிந்தது.
முத்துலட்சுமி புகாரில் தொண்டி போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்தனர். கே.கே.பட்டினம் ராஜதுரை 44, மருதுார் ராஜா 40, திருவெற்றியூர் சபரி 65, ஆகிய மூவரையும் கைது செய்து தப்பி ஓடிய புதுப்பட்டினம் தேவராஜை தேடி வருகின்றனர்.

