sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேர், ஒரு படகு விடுவிப்பு

/

ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேர், ஒரு படகு விடுவிப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேர், ஒரு படகு விடுவிப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேர், ஒரு படகு விடுவிப்பு


UPDATED : ஏப் 10, 2025 01:44 AM

ADDED : ஏப் 10, 2025 01:35 AM

Google News

UPDATED : ஏப் 10, 2025 01:44 AM ADDED : ஏப் 10, 2025 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்,:பிரதமர் மோடி வலியுறுத்தலின் பேரில் இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேரையும், ஒரு படகையும் இலங்கை அரசு நிபந்தனையின்றி விடுவித்தது.

ஏப்.,4, 5ல் இலங்கையில் பயணம் செய்த பிரதமர் மோடி கைது செய்த தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தினார். அதன்படி மார்ச் 18ல் இலங்கை கடற்படை கைது செய்த ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேரை விடுவிக்க இலங்கை அரசு உத்தரவிட்டது. மீனவர்களை நேற்று யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தியதும் 3 பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். இவர்களை கொழும்பு அருகே மெரிகானா முகாமில் போலீசார் தங்க வைத்தனர். ஓரிரு நாட்களுக்கு பின் விமானம் மூலம் சென்னை வர உள்ளனர்.

படகு விடுவிப்பு


மார்ச் 27ல் இலங்கை கடற்படையினர் கைது செய்த 11 மீனவர்களை பிரதமர் மோடி இலங்கை சென்ற ஏப்.,4ல் விடுதலை செய்தது. இந்நிலையில் மீனவர்களுடன் பறிமுதல் செய்த விசைப்படகையும் நேற்று ஊர்காவல்துறை நீதிமன்றம் விடுவித்தது.

விசாரணை கைதியாக சிறையில் உள்ள தமிழக மீனவர்களை இலங்கை அரசு அடுத்தடுத்து விடுவிப்பது மீனவர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us