sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

400 ஜெலட்டின் பறிமுதல் மேலும் ஒரு மீனவர் கைது

/

400 ஜெலட்டின் பறிமுதல் மேலும் ஒரு மீனவர் கைது

400 ஜெலட்டின் பறிமுதல் மேலும் ஒரு மீனவர் கைது

400 ஜெலட்டின் பறிமுதல் மேலும் ஒரு மீனவர் கைது


ADDED : ஜன 25, 2025 07:19 AM

Google News

ADDED : ஜன 25, 2025 07:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை : கடலில் வெடி வைத்து மீன்பிடிப்பதற்காக ஜெலட்டின் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த மீனவர் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் மலைப் பகுதியில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதிக்கு ஜெலட்டின் கடத்தி வரப்படுவது வழக்கமாக உள்ளது. 2024 ஆக.28 இரவு புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து டூவீலரில் இரண்டு பேர் ஒரு சாக்கு மூடையில் ஜெலட்டின், டெட்டனேட்டர்களை கடத்தி ஓரியூரை நோக்கி சென்றனர்.

வேகத்தடையில் டூவீலர் ஏறி இறங்கிய போது மூடை தவறி விழுந்து ஜெலட்டின் குச்சிகள் ரோட்டில் சிதறியது. அந்தபக்கமாக ரோந்து சென்ற போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். எஸ்.பி.பட்டினம் போலீசார் 400 ஜெலட்டின், 400 டெட்டனேட்டர், 2 கிலோ ஒயரை கைப்பற்றினர்.

இந்த வழக்கில் ஏற்கனவே தொண்டி புதுக்குடியை சேர்ந்த செந்தில்குமார் 35, உள்ளிட்ட ஐந்து மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். நேற்று ஜெலட்டின் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த புதுக்குடி ராம்குமார் 37, என்பவரை தொண்டி இன்ஸ்பெக்டர் சவுந்தரபாண்டியன் கைது செய்தார்.






      Dinamalar
      Follow us