sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

5 அங்கன்வாடி பணியிடத்திற்கு ஏராளமானோர் விண்ணப்பம்

/

5 அங்கன்வாடி பணியிடத்திற்கு ஏராளமானோர் விண்ணப்பம்

5 அங்கன்வாடி பணியிடத்திற்கு ஏராளமானோர் விண்ணப்பம்

5 அங்கன்வாடி பணியிடத்திற்கு ஏராளமானோர் விண்ணப்பம்


ADDED : ஏப் 13, 2025 04:30 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 04:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலாடி : ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகளின் கீழ் மாவட்டங்களில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 84 அங்கன்வாடி பணியாளர்கள், 3 குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 38 உதவியாளர்கள் பணியிடங்கள் என 125 பணியிடங்களில் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளனர்.

அந்த வகையில் கடலாடி தாலுகாவில் ஏ.பாடுவனேந்தல், இறைச்சிக்குளம், மறவாய்குடி, மேலச்சிறுபோது, சாயல்குடி ஆராய்ச்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 5 பணியிடங்களுக்கு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் காலி பணியிடத்திற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கூறியதாவது: கடலாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட 60 கிராம ஊராட்சிகளில் பெரும்பாலான அங்கன்வாடி மையங்களில் 50க்கும் அதிகமான காலி பணியிடங்கள் உள்ள நிலையில் தற்போது 5 பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கியுள்ளனர்.

இதனால் அதிகளவு போட்டி உள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் கூடுதல் பணியிடங்களுக்கு அங்கன்வாடி பணியாளர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரும்பாலான அங்கன்வாடி மையங்களில் உதவியாளர் மற்றும் பணியாளர்கள் இல்லாததால் சிரமத்தை சந்திக்கின்றனர் என்றனர்.






      Dinamalar
      Follow us