sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஹஜ் பயணம் செல்வதற்கு 52 ஆயிரம் பேருக்கு சிக்கல்; பிரதமர் தலையிட வேண்டுகோள்

/

ஹஜ் பயணம் செல்வதற்கு 52 ஆயிரம் பேருக்கு சிக்கல்; பிரதமர் தலையிட வேண்டுகோள்

ஹஜ் பயணம் செல்வதற்கு 52 ஆயிரம் பேருக்கு சிக்கல்; பிரதமர் தலையிட வேண்டுகோள்

ஹஜ் பயணம் செல்வதற்கு 52 ஆயிரம் பேருக்கு சிக்கல்; பிரதமர் தலையிட வேண்டுகோள்


ADDED : ஏப் 16, 2025 06:23 AM

Google News

ADDED : ஏப் 16, 2025 06:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி: தனியார் நிறுவனங்கள் மூலம் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள இந்தியா முழுவதும் விண்ணப்பித்த 52 ஆயிரம் பேருக்கு சிக்கல் உள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைவர் ஷாஜகான், பொதுச் செயலாளர் ஜெய்னுல் ஆலம் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கூறியிருப்பதாவது: தனியார் நிறுவனங்கள் மூலம் ஹஜ் பயணத்திற்கு இந்தியா முழுவதும் 52 ஆயிரம் பேருக்கு சவுதி அரசு விசா வழங்க ஒப்புதல் அளித்தது. இதற்கான கட்டணத்தை வசூலித்து ஹஜ் ஏஜன்சிகள் மத்திய ஹஜ் கமிட்டிக்கு செலுத்தியுள்ளனர். மார்ச் 25க்குள் தொகையை சவுதி அரசுக்கு செலுத்த வேண்டும். ஆனால் மத்திய ஹஜ் கமிட்டி செலுத்தவில்லை. இதனால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எனவே பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர் சவுதி அரசிடம் பேசி 52 ஆயிரம் பேரும் ஹஜ் பயணம் அனுமதி பெற்றுத்தர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us