sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மீனவர்கள் 6 பேர் விடுதலை; இருவருக்கு 6 மாதம் சிறை

/

மீனவர்கள் 6 பேர் விடுதலை; இருவருக்கு 6 மாதம் சிறை

மீனவர்கள் 6 பேர் விடுதலை; இருவருக்கு 6 மாதம் சிறை

மீனவர்கள் 6 பேர் விடுதலை; இருவருக்கு 6 மாதம் சிறை


ADDED : ஜன 15, 2025 11:41 PM

Google News

ADDED : ஜன 15, 2025 11:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம் : இலங்கை சிறையில் இருந்த மண்டபம் மீனவர்கள் 6 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில் இருவருக்கு 6 மாதம் சிறை தண்டனை, ரூ.23.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் இருந்து டிச.8ல் மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் இரு படகையும், அதில் இருந்த 8 மீனவர்களையும் இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். விசாரணை நாளான நேற்று மீனவர்களை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இரு படகின் டிரைவர்கள் யாசின், பத்திரப்பன் ஆகியோருக்கு தலா 6 மாதம் சிறை தண்டனையும், தலா ரூ.11.60 லட்சம் அபராதமும் விதித்தனர்.

அபராதம் கட்டத் தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டார். மற்ற 6 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

விடுவிக்கப்பட்ட 6 மீனவர்களையும் கொழும்பு அருகே மெரிகானா முகாமில் தங்க வைத்தனர். இவர்கள் ஓரிரு நாட்களில் விமானம் மூலம் சென்னை வர உள்ளனர்.






      Dinamalar
      Follow us