/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் 64 மி.மீ., மழை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்
/
ராமநாதபுரத்தில் 64 மி.மீ., மழை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்
ராமநாதபுரத்தில் 64 மி.மீ., மழை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்
ராமநாதபுரத்தில் 64 மி.மீ., மழை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்
ADDED : நவ 03, 2024 05:29 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நேற்று முன் தினம் முதல் நேற்று காலை வரை 64மி.மீ., மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. பருவ மழையை நம்பி விவசாயிகள் நெல் விதைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று முன் தினம் காலை 6:00 முதல் நேற்று காலை 6:00 மணி வரை ராமநாதபுரத்தில் அதிகபட்சமாக 64 மி.மீ., மழை பெய்துள்ளது.
அதற்கு அடுத்தபடியாக கடலாடியில் 40 மி.மீ., தொண்டியில் 29.60, ஆர்.எஸ்.மங்கலம் 16, தங்கச்சிமடம் 14, முதுகுளத்துார் 13.20, பரமக்குடி 11.40, மண்டபம் 11, கமுதி 8.20, பாம்பன் 3.60, ராமேஸ்வரம் 2 மி.மீ., என மழை பொழிவு இருந்தது.
இதையடுத்து மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
பருவ காலம் முறையாக கை கொடுத்தால் மட்டுமே நெற்பயிர்கள் விளைந்து பயன் கொடுக்கும். நிலத்தடி நீர் மேம்படவும் வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.