/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரூ.7000 கோடி அந்நிய செலாவணி ஈட்டித் தரும் தமிழக மீனவர்கள்
/
ரூ.7000 கோடி அந்நிய செலாவணி ஈட்டித் தரும் தமிழக மீனவர்கள்
ரூ.7000 கோடி அந்நிய செலாவணி ஈட்டித் தரும் தமிழக மீனவர்கள்
ரூ.7000 கோடி அந்நிய செலாவணி ஈட்டித் தரும் தமிழக மீனவர்கள்
ADDED : அக் 21, 2024 12:49 AM

ராமநாதபுரம் : தமிழக மீனவர்களால் ஆண்டுக்கு ரூ.7000 கோடி அந்நிய செலாவணி கிடைக்கும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் பாதுகாப்பில் மெத்தனம் காட்டுவதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நாட்டில் 8000 கி.மீ., துாரத்துக்கு கடற்கரை உள்ளது. இந்தியா கடல் உணவு ஏற்றுமதியில் உலக அளவில் 5வது பெரிய நாடுகளில் இந்தியா ஒன்றாக திகழ்கிறது. நாட்டில் ஆண்டுக்கு 11 மில்லியன் டன் மீன் பிடிப்பு நடக்கிறது.
இதன் மூலம் ரூ.65 ஆயிரம் கோடி அந்நிய செலாவணி கிடைக்கிறது. நாட்டில் சராசரியாக 4 சதவீதம் ஜி.டி.பி., பொருளாதார வளர்ச்சி உள்ளது. அதில் ஒரு சதவீதம் வளர்ச்சியை மீன்பிடி தொழில் தருகிறது. 14 சதவீதம் வேலை வாய்ப்பை மீன் பிடி தொழில் தருகிறது.
தமிழகத்தில் 1072 கி.மீ., துாரத்துக்கு கடற்கரையை கொண்ட 608 மீனவர் கிராமங்களில் 10.6 லட்சம் பாரம்பரிய மீனவ குடும்பங்கள் கடல் தொழிலை நம்பி வாழ்கின்றனர்.
தமிழகத்தில் 1.4 லட்சம் டன் மீன் உற்பத்தி செய்யப்படுகிறது. மீன் பிடியில் 3 வது இடத்தில் தமிழகம் உள்ளது. ரூ.7000 கோடி அந்நிய செலவாணியை ஈட்டித் தருகிறது. மத்திய, மாநில அரசுகளுக்கு உள் நாட்டு செலாவணியாகவும், வரியாகவும் ரூ.50 ஆயிரம் கோடி வருமானத்தை மீனவர்கள் ஈட்டித் தருகின்றனர்.
தமிழகத்தில் 5800 விசைப்படகுகளும், 45 ஆயிரம் நாட்டுப்படகுகளும் உள்ளன. கரை வலை, கூண்டு வலை மீன் பிடிப்புகளும் நடக்கிறது. கடற்கரைப்பகுதியில் மீனவர்கள் சம்பளம் பெறாத ராணுவ வீரர்களாக இந்திய கடல் எல்லையை பாதுகாக்கும் முதல்நிலை பாதுகாப்பு அரணாக உள்ளனர்.
இருப்பினும் மத்திய, மாநில அரசுகள் மீனவர்களை பாதுகாப்பதில் மெத்தனமாக செயல்படுவதாகவும், பெரும்பாலான திட்டங்கள் மீனவ சமுதாயத்திற்கு பலனளிக்காத வகையில் இருப்பதாகவும் மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

