sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேருக்கு அபராதம்

/

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேருக்கு அபராதம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேருக்கு அபராதம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேருக்கு அபராதம்


ADDED : ஜன 23, 2025 01:15 AM

Google News

ADDED : ஜன 23, 2025 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:இலங்கையில் ராமேஸ்வரம் மீனவர்கள் எட்டு பேருக்கு, 35.96 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த ஜன., 11ல் ராமேஸ்வரத்தில் இருந்து முகேஷ்குமார், ரெட்ரிக்சன் ஆகியோரது படகுகளில், எட்டு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். வாய்தா நாளான நேற்று தமிழக மீனவர்களை கிளிநொச்சி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

இவர்களில் இரு படகின் டிரைவர்கள் கார்மேகம், பீஸ்மன் ஆகியோருக்கு, தலா, 60.50 லட்சம் இலங்கை ரூபாய் - இந்திய மதிப்பில் 17 லட்சத்து 54,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இதை செலுத்தத் தவறினால் மேலும், நான்கு மாதம் சிறை தண்டனையும் வழங்கி உத்தரவிட்டது. மேலும், மீதமுள்ள ஆறு மீனவர்களுக்கும், தலா 50,000 ரூபாய் - இந்திய மதிப்பில் 14,500 ரூபாய், அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இதை செலுத்தத் தவறினால், கூடுதலாக 2 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

மீனவர்கள் விடுவிக்கப்படுவர் என எதிர்பார்த்த நிலையில், ஏராளமான பணம் அபராதம் விதித்ததால், மீனவர் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

இதற்கிடையே, இலங்கை நீதிமன்றத்தால் சமீபத்தில் விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள், 41 பேர் நேற்று முன்தினம் சென்னை வந்தனர்; நேற்று காலை பாம்பன் வந்தனர். அவர்களை மீன்வளத்துறையினர் அழைத்து வந்தனர்.






      Dinamalar
      Follow us