/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பன் மீனவர்கள் 9 பேருக்கு ரூ.31.50 கோடி அபராதம்: கட்ட தவறினால் 3 மாதம் சிறை
/
பாம்பன் மீனவர்கள் 9 பேருக்கு ரூ.31.50 கோடி அபராதம்: கட்ட தவறினால் 3 மாதம் சிறை
பாம்பன் மீனவர்கள் 9 பேருக்கு ரூ.31.50 கோடி அபராதம்: கட்ட தவறினால் 3 மாதம் சிறை
பாம்பன் மீனவர்கள் 9 பேருக்கு ரூ.31.50 கோடி அபராதம்: கட்ட தவறினால் 3 மாதம் சிறை
ADDED : ஆக 20, 2025 02:44 AM
ராமேஸ்வரம்:பாம்பன் மீனவர்கள் 9 பேருக்கு ரூ. 31 கோடியே 50 லட்சம் அபராதம் விதித்தும், அத்தொகையை கட்டத்தவறினால் மூன்று மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்கவும் இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜூலை 28ல் ராமேஸ்வரம் அருகே பாம்பனில் இருந்து ஒரு நாட்டுப்படகில் 9 மீனவர்கள் மன்னார் வளைகுடா கடலில் மீன் பிடித்தனர். அவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து புத்தளம் சிறையில் அடைத்தனர்.
நேற்று (ஆக.,20) மீனவர்களை புத்தளம் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
நீதிபதி 9 பேருக்கும் தலா ரூ.3 கோடியை 50 லட்சம் வீதம் ரூ. 31 கோடியே 50 லட்சம் அபராதமும் (இந்திய மதிப்பில் ரூ. 7 கோடியே 87 லட்சத்து 50 ஆயிரம்), அதனை கட்ட தவறினால் மீனவர்கள் தலா 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.
மீனவர்கள் விடுவிக்கப்படலாம் என எதிர்பார்த்திருந்தனர். அவர்களுக்கு ரூ.கோடிக்கணக்கில் அபராதம் செலுத்த வழியில்லை. அதற்கு பதிலாக சிறை தண்டனை அனுபவிக்க வேண்டியது தான் என மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.