/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாப விமோசனம் அளித்த கள்ளழகர் சேஷ வாகனத்தில் கோலாகலம்
/
சாப விமோசனம் அளித்த கள்ளழகர் சேஷ வாகனத்தில் கோலாகலம்
சாப விமோசனம் அளித்த கள்ளழகர் சேஷ வாகனத்தில் கோலாகலம்
சாப விமோசனம் அளித்த கள்ளழகர் சேஷ வாகனத்தில் கோலாகலம்
ADDED : மே 14, 2025 01:01 AM

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் சேஷ வாகனத்தில் மண்டூக மகரிஷிக்கு கள்ளழகர் சாப விமோசனம் அளித்தார்.
பரமக்குடி சவுராஷ்டிர பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் நேற்று முன்தினம் அதிகாலை 3:20 மணிக்கு கள்ளழகர் பூப்பல்லக்கில் வைகை ஆற்றில் இறங்கினார். தொடர்ந்து தல்லாகுளத்தில் சேர்க்கையாகிய பெருமாள், காலை 9:00 மணிக்கு குதிரை வாகனத்தில் அலங்காரமாகினார்.
பின்னர் மகா தீபாராதனைகள் நடந்து காலை 9:35 மணிக்கு தல்லாகுளத்தில் இருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விரதம் இருந்த பக்தர்கள் மஞ்சள் நீரை பீய்ச்சி அடித்து அழகரை வரவேற்றனர்.
தொடர்ந்து நேற்று அதிகாலை 3:00 மணிக்கு வண்டியூர் பெருமாள் கோயிலை அழகர் அடைந்தார். அதேபோல் வைகை ஆற்று மணலில் 3 கி.மீ.,க்கு ஆயிரம் பொன் சப்பரத்தை இழுத்து வண்டியூரை அடைந்தனர். நேற்று மாலை 5:00 மணிக்கு கள்ளழகர் சேஷ வாகனத்தில் அலங்காரமாகினார்.
மகா தீபாராதனைநடந்து, மாலை 6:00 மணிக்கு புறப்பட்டு வைகை ஆற்றை நோக்கி மீண்டும் புறப்பட்டார். அங்கு மட்டா மண்டகப்படியில் அழகர் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் வழங்கினார். தொடர்ந்து இரவு 10:00 மணிக்கு வாணியர் மண்டகப்படியில் விடிய விடிய தசாவதாரம் நடந்தது. ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்தனர்.