/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாரியூரில் மகா தீர்த்த யாத்திரை ஏராளமான சிவனடியார்கள் பங்கேற்பு
/
மாரியூரில் மகா தீர்த்த யாத்திரை ஏராளமான சிவனடியார்கள் பங்கேற்பு
மாரியூரில் மகா தீர்த்த யாத்திரை ஏராளமான சிவனடியார்கள் பங்கேற்பு
மாரியூரில் மகா தீர்த்த யாத்திரை ஏராளமான சிவனடியார்கள் பங்கேற்பு
ADDED : மே 26, 2025 02:10 AM

சாயல்குடி: மதுரை ஆலவாயர் அருள்பணி மன்றம் சார்பில் ஆன்மிக கோயில் பயணம் என்ற தலைப்பில் மாரியூரில் கடற்கரையில் சமுத்திர தீப ஆரத்தி நடந்தது.
மதுரை ஆலவாயர் அருள்பணி மன்றம் சார்பில் ஆன்மிக கோயில் பயணம் என்ற தலைப்பில் சிவனடியார்கள் முக்கிய சிவன்கோயிலுக்கு சென்று அங்கு சிவபூஜை செய்து வழிபாடு செய்து வருகின்றனர்.
நேற்று மதுரையில் இருந்து ஆலவாயர் அருள்பணி மன்றத்தின் சிவனடியார் சிவாஜி சுவாமி தலைமையிலான குழுவினர்கள் மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலுக்கு வந்தடைந்தனர். காலையில் அங்குள்ள மாரியூர் மன்னார் வளைகுடா கடலில் உற்ஸவமூர்த்திக்கு அபிஷேக அலங்கார தீபாரதனை செய்தனர்.
கீழக்கரை அருகே உள்ள பாரதிநகர் விவேகானந்தபுரத்தில் உள்ள காந்தாரியம்மன் கோயிலில் சமுத்திர தீப ஆரத்தி நடந்தது.
சேதுக்கரை சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் முன்புறமுள்ள கடலில் சமுத்திர ஆரத்தியும், மதியம் தேவிபட்டினம், அரியமான் கடற்கரை, ராமேஸ்வரம் அருகே வில்லுண்டி தீர்த்தம் உள்ளிட்ட இடங்களில் சமுத்திர ஆரத்தி நடந்தது.
திருவாசகம் உள்ளிட்ட பாடல்களை பாடினர். கைலாய வாத்தியம் முழங்கினர். ஏற்பாடுகளை மதுரை ஆலவாயர் அருட்பணி மன்றம் மற்றும் ராமேஸ்வரம் ராமசேது மகா சமுத்திர தீர்த்த ஆர்த்தி குழுவினர் செய்தனர்.