ADDED : ஜன 18, 2024 02:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்:பாம்பன் விசைப்படகு மீனவர்கள் அதிக மீன்கள் சிக்கியதால் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஜன.16ல் பாம்பனில் இருந்து 90 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மன்னார் வளைகுடா ஆழ்கடலில் மீன்பிடித்து விட்டு நேற்று காலை கரை திரும்பினர்.
பெரும்பாலான படகுகளில் ஏராளமான மீன்கள் சிக்கின. கிலோ சீலா ரூ.550, வெள ரூ.230, குமுளா ரூ.130, கட்டா ரூ.140, திருக்கை ரூ.80 முதல் 160 என மீன்களுக்கு உரிய விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சிஅடைந்தனர்.