/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரூ.2.75 கோடி தங்க கட்டிகள் பறிமுதல் ராமேஸ்வரத்தில் ஒருவர் கைது
/
ரூ.2.75 கோடி தங்க கட்டிகள் பறிமுதல் ராமேஸ்வரத்தில் ஒருவர் கைது
ரூ.2.75 கோடி தங்க கட்டிகள் பறிமுதல் ராமேஸ்வரத்தில் ஒருவர் கைது
ரூ.2.75 கோடி தங்க கட்டிகள் பறிமுதல் ராமேஸ்வரத்தில் ஒருவர் கைது
ADDED : பிப் 04, 2024 02:36 AM

ராமேஸ்வரம்: -ராமேஸ்வரம் அருகே இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.2.75 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகளை சுங்க புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.
பாம்பன் குந்துகால் அருகே திருச்சி சுங்க புலனாய்வுத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது டூவீலரில் வந்த ஒருவரை மடக்கி சோதனையிட்டனர்.
அவரிடம் 4 கிலோ 364 கிராம் தங்க கட்டிகள் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்து ராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரித்தனர்.
அவர் ராமேஸ்வரத்தை சேர்ந்த நம்புராஜன் 40, என தெரிய வந்தது. மேலும் இந்த தங்கக் கட்டிகளை இலங்கையில் இருந்து கள்ளத்தனமாக நாட்டுப்படகில் பாம்பன் குந்துகால் கடற்கரைக்கு கடத்தி வந்துள்ளார். இதன் மதிப்பு ரூ.2.75 கோடி. இதையடுத்து நம்புராஜன் மீது சுங்கத்துறையினர் வழக்குப்பதிந்து கைது செய்து அவரை சிறையில் அடைத்தனர். தங்கக் கட்டிகளை நாட்டுப்படகில் கடத்தி வந்த மேலும் சிலரை தேடிவருகின்றனர்.