/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அபுதாபியில் குப்பைக்கு நடுவில் வாழும் விருத்தாசலம் நபர்
/
அபுதாபியில் குப்பைக்கு நடுவில் வாழும் விருத்தாசலம் நபர்
அபுதாபியில் குப்பைக்கு நடுவில் வாழும் விருத்தாசலம் நபர்
அபுதாபியில் குப்பைக்கு நடுவில் வாழும் விருத்தாசலம் நபர்
ADDED : மே 28, 2025 02:14 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தை சேர்ந்த வாலிபர் துபாய்க்கு வேலைக்கு சென்ற நிலையில் ஊர் திரும்ப முடியாமல் அபுதாபியில் குப்பையில் வாழ்வதாக, அவர் பேசியுள்ள வீடியோ பரவுகிறது.
ராமநாதபுரம் கொத்த தெருவைச் சேர்ந்த நடராஜன் மகன் முத்துக்குமார் 35. குடும்ப வறுமையால், துபாய்க்கு 2 ஆண்டுகளுக்கு முன் வேலைக்கு சென்றார். ஆறு மாதங்களுக்கு முன் அவர் பணிபுரிந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
கம்பெனியில் அவரின் பாஸ்போர்ட் சிக்கிக் கொண்டதால் நாடு திரும்ப முடியவில்லை. இதனால், ஆறு மாதங்களாக அபுதாபியில் வீதியில் குப்பைக்கு மத்தியில் படுத்து உறங்கி வருகிறார்.
இதனை கவனித்த தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் முத்துகுமாரின் குமுறலை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் முத்துகுமார், 'நானும், விருத்தாசலத்தைச் சேர்ந்தவரும் ஆறு மாதங்களாக அபுதாபியில் குப்பைக்கு மத்தியில் படுத்து துாங்குகிறோம்.
இங்குள்ள லேபர் கோர்ட்டிற்கு சென்றோம். துபாய் கோர்ட்டிற்கு செல்ல கூறுகின்றனர். எங்களால் அங்கு செல்ல முடியவில்லை' என கூறியிருந்தார்.
அதிர்ச்சியுற்ற குடும்பத்தினர் முத்துக்குமாரை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

