/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வலையில் சிக்கிய ஆமை கடலில் விடப்பட்டது
/
வலையில் சிக்கிய ஆமை கடலில் விடப்பட்டது
ADDED : ஏப் 22, 2025 05:48 AM
திருவாடானை: தொண்டி கடலில் மீனவர்களின் வலையில் சிக்கிய ஆமை உயிருடன் மீட்கப்பட்டு கடலில் விடப்பட்டது. தொண்டியை சேர்ந்த மீனவர்கள் வேலுச்சாமி, ராஜ்குமார், கார்த்திகேயன் ஆகியோர் நேற்று காலை நாட்டுப்படகில் மீன்பிடிக்க சென்றனர். அவர்களின் வலையில் 50 கிலோ அரிய வகை கடல் ஆமை சிக்கியது. இது குறித்து தொண்டி மரைன் போலீசாருக்கு தெரிவித்தனர். அவர்களின் அறிவுரைப் படி ஆமையை மீண்டும் கடலில் விட்டனர்.
மீனவர்கள் கூறுகையில், தற்போது இனப்பெருக்க காலம் என்பதால் ஆமைகள் அடிக்கடி கடற்கரை பகுதிக்கு வருவது வழக்கமாக உள்ளது. வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆமையை பிடிக்கக் கூடாது என்பதால் உயிருடன் மீட்டு கடலில் விட்டோம்.
வலையில் சிக்கிய ஆமை சித்தாமை வகையை சேர்ந்தது. ஆமையால் வலை மிகவும் சேதமடைந்தது என்றனர்.