/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தபால் அலுவலகங்களில் ஆதார் தைத் திருவிழா
/
தபால் அலுவலகங்களில் ஆதார் தைத் திருவிழா
ADDED : ஜன 20, 2024 04:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கோட்ட தபால் துறை சார்பில் தபால் அலுவலகங்களில் ஆதார் தைத் திருவிழா என்ற பெயரில் சிறப்பு முகாம் நடக்கிறது.
ராமநாதபுரம் கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் கூறியிருப்பதாவது:
தை மாதத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்வு செய்த 31 தபால் அலுவலகங்களில் ஆதார் சிறப்பு முகாம் தைத்திருவிழா பெயரில் ஜன.16 முதல் பிப்.2 வரை நடக்கிறது.
ராமநாதபுரம், பரமக்குடி தலைமை தபால் அலுவலங்களில் முன்பு அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை ஆதார் சேவை முகாம் நடக்கிறது. பொதுமக்கள் அருகில் உள்ள தபால் அலுவலகங்களுக்கு சென்று பயன்பெறலாம் என்றார்.